ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகை சேர்ந்த இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இரண்டு நடிகர்கள் மீதும், தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் முறையான ஒத்துழைப்பு தரவில்லை என்கிற புகார்களின் அடிப்படையில் ரெட் கார்டு போடப்பட்டது. அதேசமயம் அவர்கள் ஏற்கனவே நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும், போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபடலாம் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷேன் நிகம் நடித்துள்ள ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஷேன் நிகம் தனது தவறுகளுக்கு பொறுப்பேற்று தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக அல்லாத ஸ்ரீநாத் பாஷியும் இதேபோன்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து இவர்கள் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இவர்கள் புதிய படங்களில் நடிக்கலாம் என்றாலும் தயாரிப்பாளர்கள் தங்களது சொந்த ரிஸ்க்கில் தான் இவர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமே தவிர இவர்கள் குறித்து ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கு நடிகர் சங்கமோ தயாரிப்பாளர் சங்கமோ பொறுப்பேற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.