5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் மகேஷ்பாபு. பிரபல சீனியர் ஹீரோவான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவருக்கு மஞ்சுளா என்கிற சகோதரியும் உண்டு. மகேஷ்பாபு கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே மலையாளத்தில் சிபிமலயில் இயக்கத்தில் வெளியான சம்மர் இன் பெத்லகேம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் மஞ்சுளா.
தமிழில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் சரத்குமார், விஜயசாந்தி நடித்த ராஜஸ்தான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் நடிப்பை விட்டு ஒதுங்கிக் சினிமா தயாரிப்பு, பிசினஸ் என ரூட்டை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் தான் நடிப்பை விட்டு ஒதுங்கியதற்கான காரணத்தையும் ஆதலால் பட்ட மன அழுத்தத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சுளா.
இது பற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்ததுமே நான் நடிப்பதற்கு என் தந்தை கிருஷ்ணாவின் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் என்னை ஒரு நடிகையாக பார்க்க விரும்பவில்லை. அதுமட்டுமல்ல எனது உறவினர்கள் கூட இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய மன அழுத்தத்திற்கும் ஆளானேன். அதன்பிறகு யோகாவில் தீவிர கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து பின்பு பிசினஸில் இறங்கினேன்” என்று கூறியுள்ளார்.