எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் மகேஷ்பாபு. பிரபல சீனியர் ஹீரோவான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவருக்கு மஞ்சுளா என்கிற சகோதரியும் உண்டு. மகேஷ்பாபு கதாநாயகனாக அறிமுகமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே மலையாளத்தில் சிபிமலயில் இயக்கத்தில் வெளியான சம்மர் இன் பெத்லகேம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் மஞ்சுளா.
தமிழில் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் சரத்குமார், விஜயசாந்தி நடித்த ராஜஸ்தான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் நடிப்பை விட்டு ஒதுங்கிக் சினிமா தயாரிப்பு, பிசினஸ் என ரூட்டை மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் தான் நடிப்பை விட்டு ஒதுங்கியதற்கான காரணத்தையும் ஆதலால் பட்ட மன அழுத்தத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சுளா.
இது பற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் ஒரு சில படங்களில் நடித்ததுமே நான் நடிப்பதற்கு என் தந்தை கிருஷ்ணாவின் ரசிகர்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் என்னை ஒரு நடிகையாக பார்க்க விரும்பவில்லை. அதுமட்டுமல்ல எனது உறவினர்கள் கூட இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய மன அழுத்தத்திற்கும் ஆளானேன். அதன்பிறகு யோகாவில் தீவிர கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து பின்பு பிசினஸில் இறங்கினேன்” என்று கூறியுள்ளார்.