ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ். தமிழில் 'ஜெகமே தந்திரம்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் 'ஆண்டனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசனுக்காக படக் குழுவினருடன் லண்டன் சென்றார். அவருடன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்ட படக் குழுவினரும் சென்றிருந்தனர்.
புரமோசன் நிகழ்வு முடிந்தவுடன் ஜோஜு ஜார்ஜ் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது பையில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தவித்தார் ஜோஜு ஜார்ஜ். படத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு உடனடியாக பணத்தை வழங்கியது. இதுதொடர்பாக லண்டனின் உள்ள இந்திய தூதரகத்தில் ஜோஜு ஜார்ஜ் புகார் அளித்தார். அவர் நாடு திரும்புவதற்காக தற்காலிக பாஸ்போர்ட்டை தூதரகம் வழங்கியது. படக் குழுவினரில் மேலும் இருவரின் பாஸ்போட்டும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.