'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக மாறி வெற்றிமாறன் இயக்கத்தில் ‛விடுதலை' என்கிற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் இறுதியில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கு மீதம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை அருகில் உள்ள நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் சென்று அம்மன் தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளனர். தற்போது கோயில் திருவிழா நடைபெறுகிறது என்பதால் கோயிலுக்கு வருகை தந்த அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.




