ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் அதிகம் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் மட்டும் முக்கியமான படங்களில், குறிப்பாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்குகின்ற படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்றும் மலையாள நடிகர் திலீப் நடிக்க உள்ள அவரது 148 வது படத்தில் தான் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல போட்டோகிராபர் ஷாலு என்பவர் தெரியப்படுத்தி உள்ளதுடன், திலீப் 148 வது படத்திற்கான கிளாப் போர்டை வைத்து ஒரு பெண்மணி தனது முகத்தை மறைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, சிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.