சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தமிழ் சினிமாவில் சில படங்களும், சில கதாபாத்திரங்களும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். 'ஜெய் பீம்' படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரமாக 'ராஜகண்ணு' கதாபாத்திரத்தில் நடித்தவர் மணிகண்டன். அவர்தான் போலீஸ் கஸ்டடியில் இறந்து போவார். அது தெரியாத லிஜோ மோள் ஜோஸ் அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென நீதிமன்றம் செல்வார். அந்தப் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமாக நடித்து நம்மை கண் கலங்க வைத்தவர் மணிகண்டன்.
அப்படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'குட் நைட்' படத்தில் நம்மை மீண்டும் ஒரு முறை காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நெகிழ வைத்திருக்கிறார். 'மோகன்' என்ற கதாபாத்திரம், அலுவலக நண்பர்களுக்கு 'மோட்டார் மோகன்', காரணம் தூக்கத்தில் அவர் விடும் குறட்டை சத்தத்திற்காக அந்த பட்டப் பெயர். மோகன் கதாபாத்திரத்திலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து அவரைப் பாராட்டி வருகிறார்கள். படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்திற்கான தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்திருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு 'கலக்கப் போவது யாரு' டிவி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டவர். அடுத்து 'பீட்சா 2' படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் நுழைந்து நடிகராகவும் மாறி, கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். 'விக்ரம் வேதா' படத்திற்கும் வசனம் எழுதியவர் மணிகண்டன். 'விஸ்வாசம்' படத்திற்கு வசனம் எழுதியவர்களில் ஒருவர்.