சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஒரே கதையைக் காப்பியடித்த (?) சில தமிழ்ப் படங்கள் ஒரே சமயத்தில் வெளியான வரலாறும் இருக்கிறது. பிரசாந்த், சிம்ரன் நடித்த 'ஜோடி', சூர்யா, ஜோதிகா நடித்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்', ஆகிய இரண்டு படங்களின் கதையும் ஒரே கதைதான். ஒரே ஹாலிவுட் படத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்ட படங்களும் இருக்கிறது.
அந்த விதத்தில் அடுத்த 'காப்பி' படமாக அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 'டியர்' படம் இருக்கப் போகிறது. இந்தப் படத்தில் கொஞ்சம் 'மாத்தி யோசி' என யோசித்திருக்கிறார்கள். கடந்த வருடம் வெளிவந்த 'குட்நைட்' படத்தின் கதையும், இந்த 'டியர்' படத்தின் கதையும் ஒன்றுதான். அதில் குறட்டை விடும் கதாநாயகன், இதில் குறட்டை விடும் கதாநாயகி என்பதுதான் வித்தியாசம்.
நேற்று வெளியான டிரைலரின் யு டியுப் பக்கத்தில் இதே போன்று பல கமெண்ட்டுகள் உள்ளன. கடந்த வருடத்தின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மணிகண்டன், மீதா ரகுநாத் நடித்த 'குட்நைட்' படம் அமைந்தது. அது போல 'டியர்' படமும் வெற்றிப் படமாக அமையுமா என்பதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.