காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படப்பிடிப்பு நடத்தி அதை சுற்றி கதை களம் அமைத்து அவ்வப்போது படங்கள் வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமான படம் 'கண்காட்சி'. 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அப்போது தென்சென்னை மற்றும் வடசென்னையில் நடந்த இரண்டு கண்காட்சிகளில் மட்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 'கண்காட்சி' என்ற பெயரிலேயே வெளியானது.
இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கி இருந்தார். சிவகுமார், குமாரி பத்மினி, மனோரமா, சிஐடி சகுந்தலா, கள்ளபார்ட் நடராஜன், சுருளிராஜன் நடித்திருந்தார்கள். சிவகுமார்-குமாரி பத்மினி ஒரு ஜோடியாகவும், கள்ளபார்ட் நடராஜன்--ஏ.சகுந்தலா ஒரு ஜோடியாகவும், சுருளிராஜன்-மனோரமா மற்றொரு ஜோடியாகவும் நடித்த்திருந்தனர். மற்றும் கே.டி.சந்தானம், ரி.என்.சிவதாணு, வி.கோபாலகிருஷ்ணன், டைப்பிஸ்ட் கோபு, மாஸ்டர் தசரதன், ஏ.கே.வீராச்சாமி, பேபி ராணி, ஹெரான் ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தார்கள். பீட்டர் என்ற நாய் ஒன்றும் நடித்துள்ளது. குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. படமும் வெற்றி பெற்றது.