சின்னத்திரையில் பார்த்திபன் | பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் |
1984ம் ஆண்டு வெளியான 'மைடியர் குட்டிச்சாத்தான்' படைத்த பல சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததுதான். முதல் 3டி படம், 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி அந்தக் காலத்திலேயே 25 கோடி வரை வசூலித்த படம், எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழி நடிகர்களை இணைத்து வெளியிட்ட படம். மலையாளத்தில் கோடியில் வசூலித்த முதல்படம். இப்படி பல சாதனைகள் அந்த படத்திற்கு உண்டு.
3டி கண்ணாடி அணிந்து கொண்டு உற்சாகமாக படம் பார்த்து திரையில் இருந்து வரும் ஐஸ்கிரீமை தொட முயன்று தோற்ற அனுபவம் 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்தது. ஆனாலும் குட்டிச்சாத்தானுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது பல தலைமுறைகளை வாழ வைத்த படம். இந்த படத்தின் லாபத்தின் பெரும் பகுதியை கொண்டு சென்னை அருகே 'கிஸ்கிந்தா' என்ற தீம் பார்க்கை உருவாக்கினார் தயாரிப்பாளர் அப்பச்சன்.
படத்தில் இடம்பெற்ற 'சுட்டி குழந்தைகளே' என்ற பாடலுக்காக பல லட்சம் செலவில் செட் அமைத்த அப்பச்சனுக்கு அதே இடத்தில் ஒரு தீம் பார்க் கட்டும் ஆசையும் வந்தது. படம் வெளியான பிறகு அது நிறைவேறவும் செய்தது. இன்றைக்கு அந்த தீம் பார்க்கின் மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். ஒரே ஒரு படம் பல தலைமுறையின் அசையா சொத்தானது. சினிமா செய்யும் மேஜிக்குகளில் இதுவும் ஒன்று.