மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! |
1984ம் ஆண்டு வெளியான 'மைடியர் குட்டிச்சாத்தான்' படைத்த பல சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததுதான். முதல் 3டி படம், 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி அந்தக் காலத்திலேயே 25 கோடி வரை வசூலித்த படம், எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழி நடிகர்களை இணைத்து வெளியிட்ட படம். மலையாளத்தில் கோடியில் வசூலித்த முதல்படம். இப்படி பல சாதனைகள் அந்த படத்திற்கு உண்டு.
3டி கண்ணாடி அணிந்து கொண்டு உற்சாகமாக படம் பார்த்து திரையில் இருந்து வரும் ஐஸ்கிரீமை தொட முயன்று தோற்ற அனுபவம் 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்தது. ஆனாலும் குட்டிச்சாத்தானுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது பல தலைமுறைகளை வாழ வைத்த படம். இந்த படத்தின் லாபத்தின் பெரும் பகுதியை கொண்டு சென்னை அருகே 'கிஸ்கிந்தா' என்ற தீம் பார்க்கை உருவாக்கினார் தயாரிப்பாளர் அப்பச்சன்.
படத்தில் இடம்பெற்ற 'சுட்டி குழந்தைகளே' என்ற பாடலுக்காக பல லட்சம் செலவில் செட் அமைத்த அப்பச்சனுக்கு அதே இடத்தில் ஒரு தீம் பார்க் கட்டும் ஆசையும் வந்தது. படம் வெளியான பிறகு அது நிறைவேறவும் செய்தது. இன்றைக்கு அந்த தீம் பார்க்கின் மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். ஒரே ஒரு படம் பல தலைமுறையின் அசையா சொத்தானது. சினிமா செய்யும் மேஜிக்குகளில் இதுவும் ஒன்று.