ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 22ம் தேதி வெளியான படம் 'ரெபல்'. இப்படத்திற்கு சிறப்பான விமர்சனங்களோ, வரவேற்போ கிடைக்கவில்லை. அதனால் படம் எதிர்பார்த்ததை விடவும் மோசமான வசூலையே பெற முடிந்தது. இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படத்தை இன்று முதல் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக ஒரு தமிழ்ப் படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை தமிழ்த் திரையுலகத்தில் பாலோ செய்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்தப் படத்தை இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய படங்கள் வெளியானால் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் தர வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. அது குறித்து திரையுலக சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்கள். 'ரெபல்' இப்படி இரண்டு வாரங்களில் வெளியானதை வைத்து மேலும் சில படங்கள் இப்படி வெளியாக வாய்ப்புகள் உள்ளது.