என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி | ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் | அமெரிக்க திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம் |
அருவி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அதிதி பாலன். அதன் பிறகு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். 3 வருட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்தார். கோல்ட் கேஸ், படவேட்டு என்ற இரண்டு மலையாள படங்களில் நடித்து விட்டு மீண்டும் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறார். தங்கர் பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருவி படத்திற்கு பிறகு முழுமையான நாயகியாக நடிக்கும் படம் இது.
இதற்கிடையில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் நடித்து வந்தார். இதில் பெரிய கேரக்டரில் நடிக்கிறார் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தில் சமந்தாவின் அதாவது கதைப்படி சகுந்தலையின் தோழிகளில் ஒருத்தியாக அவர் நடித்திருப்பது டிரைலர் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு வேளை அவருக்கு கதையில் வேறு முக்கியத்தும் எதுவும் இருக்கிறதா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரிய வரும்.