மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படமான 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தில் பிஸியானதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தற்போது 'மதராஸி' படக்குழு இலங்கையில் உள்ளனர். இதில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வல், ருக்மணி வசந்த் ஆகியோர் காட்சியை பிரதானமாக 15 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி வாரத்தையொட்டி திரைக்கு வருகிறது.