நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் 'தக்லைப்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ஜூன் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வரப்போகிறது. இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சுகர் பேபி' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் திரிஷா நடித்துள்ளார். மேலும், தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு காதல் படத்தை மணிரத்னம் இயக்க போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், தக்லைப் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் மணிரத்னம் அடுத்த படம் குறித்து கூறுகையில், ''அடுத்தபடியாக ஓகே கண்மணி படத்தை போன்று காதல் கதையில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதையடுத்து அந்த கதைக்கு ஏற்ற மாதிரி நடிகர்கள் வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் சரியாக அமைந்தால் அடுத்தபடியாக அந்த படத்தை இயக்குவேன். அப்படி இல்லை என்றால் அந்த படத்தை பின்னர் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மணிரத்னம். இதன்மூலம் புதுமுகங்களை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.