லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் | ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் வெளியானது | அஜித் தோவல் வேடத்தில் மாதவன் | திருமணம் குறித்து ஸ்ருதிஹாசன் சொன்ன பதில் | விஷ்ணு விஷால் மகளுக்கு ‛மிரா' என பெயர் சூட்டிய அமீர்கான் | என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் |
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து, மற்றும் பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார் திரிஷா. இதில் பொன்னியின் செல்வனில் அவர் நடித்த குந்தவை கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கியுள்ள 'தக்லைப்' படத்திலும் நடித்திருக்கிறார் திரிஷா.
இப்படத்தின் டிரைலரில் அவரது கேரக்டர் கவனம் பெற்றது. மணிரத்னம் அளித்த ஒரு பேட்டியில், தக்லைப் படத்தில் திரிஷா நடித்துள்ள வேடம் குறித்து கூறுகையில், ''இந்த படத்தில் திரிஷாவுக்கு ஒரு வித்தியாசமான வேடம். குறிப்பாக பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு ஆப்போசிட்டான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது கேரக்டர் குறித்து முதலில் அவரிடம் சொன்னபோது, அது அவரை இம்ப்ரஸ் பண்ணியது. அதனால் இந்த வேடத்தை மிகவும் பிடித்து நடித்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார் மணிரத்னம். அதனால் தக்லைப் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வேடத்தில் இருந்து ஒரு மாறுபட்ட, அதேசமயம் அதற்கு இணையான இன்னொரு முக்கியத்துவமான வேடத்தில் திரிஷாவும் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
தனது கேரக்டர் குறித்து திரிஷா வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்த படத்தில் எங்களது ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும். என்றாலும் எனது கேரக்டரை சிலர் விமர்சிக்கவும் செய்வார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் இந்த வேடத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் ஆனேன்'' என்று கூறியுள்ள திரிஷா, இப்படத்திற்காக ''கமலும், மணிரத்னமும் எவ்வளவு புரிதலுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை அனைத்து நடிகர்களும் பார்க்க வேண்டும். அது கூட ஒரு மாயாஜாலம் போல்தான் இருந்தது'' என்றும் தெரிவித்திருக்கிறார்.