பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, 'விடுதலை, கருடன், மாமன்' போன்ற படங்களின் மூலம் கதாநாயகன் பாதைக்கு திரும்பியுள்ளார்.
தற்போது 'மாமன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிம்புக்காக நகைச்சுவை கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூரி கூறுகையில், "நான் சரி என சொன்னாலும் தம்பி சம்மதம் சொல்லமாட்டார். அண்ணா நாம் இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தால் சரிசமமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என தம்பி சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்போம்" எனத் தெரிவித்தார்.