'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
1980களில் கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறவர் அபிநயா. சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினை பெற்றவர். தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
அபிநயாவின் சகோதரர் சீனிவாசன் மனைவி லட்சுமி தேவியை அபிநயாவும், சீனவாசன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கடந்த 2002ம் ஆண்டு லட்சுமிதேவி வழக்கு தொடர்ந்தார். அபிநயா உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை அபிநயா உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும் சீனிவாஸ் உள்பட 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பெங்களூரு மாவட்ட கோர்ட்டில் அபிநயா மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த கோர்ட்டு, 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லட்சுமி தேவி மற்றும் அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், பெங்களூரு மாவட்ட கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தும், கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது. அதன்படி அபிநயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், செல்வராஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அபிநயாவின் சகோதரர் சீனிவாஸ் இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது. அபிநயா தீர்ப்பை ஏற்று சிறைக்கு செல்வாரா? அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாரா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்