துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அமீர், யோகி, வட சென்னை போன்ற படங்களில் நடிகராகவும் உருவெடுத்தார். அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் ஆர்யா நடிப்பில் சந்தனத்தேவன் என்ற ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அந்த படம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.
அதையடுத்து நாற்காலி என்ற படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அந்த செய்தியும் அடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனின் திரைக்கதையில் தனது புதிய படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அமீர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு திரைப்படத்தில் இன்னொருவரின் பார்வையும் சேரும்போது அந்தப்படம் மேலும் அழகாகும் என்று தெரிவித்திருக்கும் அமீர், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவலை வெளியிடவில்லை.