காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அது வடசென்னை படத்தின் தொடர்ச்சி என பலரும் கூறிவந்த நிலையில், இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவானாலும், ‛வட சென்னை 2' இல்லை என வெற்றிமாறன் கூறியுள்ளார். சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ உடன் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‛வட சென்னை' படத்தை போன்று அதே காலகட்டத்தில் நடக்கும் மற்றொரு கதையாக இது உருவாகியுள்ளது, புரோமோவில் தெரிகிறது. கையில் கத்தியுடன் சிம்பு நடந்து செல்லும் காட்சிகளுடன் கூடிய புரோமோவில் படத்திற்கான அப்டேட் விரைவில் என அறிவித்துள்ளனர்.
'வடசென்னை' படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அவருக்கு பதிலாக தனுஷ் நடித்தார். இந்நிலையில் தற்போது வடசென்னை பின்னணியிலான மற்றொரு கதையில் சிம்பு - வெற்றிமாறன் இணைந்திருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.