‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அது வடசென்னை படத்தின் தொடர்ச்சி என பலரும் கூறிவந்த நிலையில், இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவானாலும், ‛வட சென்னை 2' இல்லை என வெற்றிமாறன் கூறியுள்ளார். சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ உடன் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‛வட சென்னை' படத்தை போன்று அதே காலகட்டத்தில் நடக்கும் மற்றொரு கதையாக இது உருவாகியுள்ளது, புரோமோவில் தெரிகிறது. கையில் கத்தியுடன் சிம்பு நடந்து செல்லும் காட்சிகளுடன் கூடிய புரோமோவில் படத்திற்கான அப்டேட் விரைவில் என அறிவித்துள்ளனர்.
'வடசென்னை' படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அவருக்கு பதிலாக தனுஷ் நடித்தார். இந்நிலையில் தற்போது வடசென்னை பின்னணியிலான மற்றொரு கதையில் சிம்பு - வெற்றிமாறன் இணைந்திருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.