திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு புதிய படத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அது வடசென்னை படத்தின் தொடர்ச்சி என பலரும் கூறிவந்த நிலையில், இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவானாலும், ‛வட சென்னை 2' இல்லை என வெற்றிமாறன் கூறியுள்ளார். சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த நிலையில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை புரோமோ உடன் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‛வட சென்னை' படத்தை போன்று அதே காலகட்டத்தில் நடக்கும் மற்றொரு கதையாக இது உருவாகியுள்ளது, புரோமோவில் தெரிகிறது. கையில் கத்தியுடன் சிம்பு நடந்து செல்லும் காட்சிகளுடன் கூடிய புரோமோவில் படத்திற்கான அப்டேட் விரைவில் என அறிவித்துள்ளனர்.
'வடசென்னை' படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அவருக்கு பதிலாக தனுஷ் நடித்தார். இந்நிலையில் தற்போது வடசென்னை பின்னணியிலான மற்றொரு கதையில் சிம்பு - வெற்றிமாறன் இணைந்திருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.