'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொம்னிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம் உலகளவில் 100 கோடி வசூலித்துள்ளது. அதையொட்டி படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் நடந்த விழாவில் நடிகர் துல்கர் பேசுகையில், ‛‛லோகா வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அடுத்து 5 அல்லது அதற்குமேல் பாகங்களாக இந்த படம் வரலாம். நல்ல படங்களுக்கு தமிழக ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கிறார்கள். விரைவில் படக்குழுவுக்கு பரிசுகள் அளிக்க உள்ளேன். அப்பா மம்முட்டி நலமாக இருக்கிறார் என்றார்.
கல்யாணி பிரியதர்சன் பேசுகையில், "நான் ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் அப்பா பிரியதர்ஷன் கை கால் பத்திரம் என்றார். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. சூர்யா, ஜோதிகா ஆகியோர் வீடியோ காலில் வாழ்த்தினார்கள். பல இடங்களில் இருந்து வாழ்த்து வந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு ஹீரோயின் ஓரியண்ட் படம் தென்னிந்தியாவில் 100 கோடி வசூலித்து இருப்பது இதே முதன் முறை என்கிறார்கள். அவ்வளவு மகிழ்ச்சி ஆக இருக்கிறது என்றார்.
ஹீரோ நஸ்லனும் தமிழக மக்களுக்கு நன்றி என்றார்.




