ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொம்னிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம் உலகளவில் 100 கோடி வசூலித்துள்ளது. அதையொட்டி படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் நடந்த விழாவில் நடிகர் துல்கர் பேசுகையில், ‛‛லோகா வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அடுத்து 5 அல்லது அதற்குமேல் பாகங்களாக இந்த படம் வரலாம். நல்ல படங்களுக்கு தமிழக ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கிறார்கள். விரைவில் படக்குழுவுக்கு பரிசுகள் அளிக்க உள்ளேன். அப்பா மம்முட்டி நலமாக இருக்கிறார் என்றார்.
கல்யாணி பிரியதர்சன் பேசுகையில், "நான் ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் அப்பா பிரியதர்ஷன் கை கால் பத்திரம் என்றார். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. சூர்யா, ஜோதிகா ஆகியோர் வீடியோ காலில் வாழ்த்தினார்கள். பல இடங்களில் இருந்து வாழ்த்து வந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு ஹீரோயின் ஓரியண்ட் படம் தென்னிந்தியாவில் 100 கோடி வசூலித்து இருப்பது இதே முதன் முறை என்கிறார்கள். அவ்வளவு மகிழ்ச்சி ஆக இருக்கிறது என்றார்.
ஹீரோ நஸ்லனும் தமிழக மக்களுக்கு நன்றி என்றார்.