'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு பைனான்ஸ் பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை இயக்கித் தர, பர்ஸ்ட் காபி அடிப்படையில் 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாம் லைகா நிறுவனம். ஆனால் அந்த தொகையை கிளைமாக்ஸை நெருங்குவதற்கு முன்பே முடித்து விட்டாராம் ஜேசன் சஞ்சய். அதனால்தான் படப்பிடிப்பை தற்போது அவர் நிறுத்தி வைத்திருப்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.