ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல் நடிகர் ஆகாமல் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட சென்னையில் தொடங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.