பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல் நடிகர் ஆகாமல் தாத்தா எஸ்.ஏ சந்திரசேகர் வழியில் இயக்குனராக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட சென்னையில் தொடங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கை, பேங்காக் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




