‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்தவகையில் மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதுதான் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. இத்தனைக்கும் இதற்கு முன் நிவின்பாலி இப்படி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது இல்லை. தெலுங்கு படங்களிலும் கூட அவர் நடித்ததில்லை. ஆனால் இந்த முறை பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதிலும் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நிவின்பாலியின் வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.. எப்பொழுதுமே நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிக ஆழமாக உயிர் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக ஓம் சாந்தி ஒசானா மற்றும் பிரேமம் ஆகிய படங்கள்” என்று கூறியுள்ளார்.