'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் |

தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்தவகையில் மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதுதான் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. இத்தனைக்கும் இதற்கு முன் நிவின்பாலி இப்படி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது இல்லை. தெலுங்கு படங்களிலும் கூட அவர் நடித்ததில்லை. ஆனால் இந்த முறை பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதிலும் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நிவின்பாலியின் வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.. எப்பொழுதுமே நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிக ஆழமாக உயிர் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக ஓம் சாந்தி ஒசானா மற்றும் பிரேமம் ஆகிய படங்கள்” என்று கூறியுள்ளார்.