டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

துல்கர் சல்மான் மலையாளத்தில் தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான், இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திற்கு சல்யூட் என டைட்டில் வைத்து சமீபத்தில் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானின் போலீஸ் கெட்டப்பில் செகன்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப்படத்தில் அரவிந்த் கருணாகரன் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பதையும் அறிவித்துள்ளனர். இந்தப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான்..




