நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணுவம் தொடர்பான கதையில் இந்தப்படம் உருவாகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுதந்திர தினம் குறித்து பேசியுள்ள சிவகார்த்திகேயன், ‛‛200 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்து போராடி பெற்ற இந்திய விடுதலையை போற்றுவோம். ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் வெயிலும் பனியும் பாராமல் இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். தாய் மண்ணிற்கு வணக்கம்'' என தெரிவித்துள்ளார்.