ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
அருள் சரவணன் நடித்த லெஜெண்ட் என்ற படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியான போதும், அதை அவர் உறுதி செய்யாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று சுதந்திர தின விழாவை குழந்தைகளுடன் கொண்டாடி நடனமாடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, இந்த உலகத்திலேயே தாய் - தந்தை மாதிரி குழந்தைகளுக்கு நல்லது செய்பவர்கள் நல்லது நினைப்பவர்கள் யாருமே இல்லை. எனவே பெற்றோர் நமக்கு கடவுள் மாதிரி. அவர்கள் சொல்வதைக் கேட்டு மதித்து வாழ்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று குழந்தைகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கி இருக்கிறார் சரவணன். மேலும், தனது அடுத்த படம் குறித்து அவர் கூறிய போது, ஒரு நல்ல கதைக்காக தான் இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்தேன். தற்போது நான் எதிர்பார்த்தபடி ஒரு கதை கிடைத்து விட்டது. அதனால் விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் லெஜென்ட் சரவணன்.