புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதேசமயம் அல்லரி நரேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓரளவு எதிர்பார்ப்புடன் வெளியான நாந்தி என்கிற படமும் மவுத் டாக் மூலமாக பிக் அப் ஆகி டீசன்டான வெற்றியை பெற்றுள்ளது.
தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதியாக அல்லரி நரேஷும், அவரை மீட்க சட்டப்போராட்டம் நடத்தும் வக்கீலாக வரலட்சுமியும் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு எந்த மொழியிலும் ரீமேக் ஆகும் வேல்யூ இருப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.