முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? |
இந்தியில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் என நட்சத்திர பட்டாளத்துடன் நடிகர் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா'. புராணக்கதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. 2003ல் வெளியான கார்கில் படத்திற்கு பிறகு நாகர்ஜுனா இந்தியில் நடித்துள்ள படம் இது.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தனக்கு ரொம்பவே ஏமாற்றம் தந்ததாக குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜுனா. காரணம் இந்தப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கப்போகும் ஆசையில் இருந்தாராம். ஆனால் இருவர் நடித்த காட்சிகளையும் தனித்தனியாகவே படமாக்கினார்களாம்.. அதனால் ஒரு காட்சியில் கூட அமிதாப்புடன் இணைந்து நடிக்க முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியுள்ளார் நாகர்ஜுனா. இருவரும் தனித்தனியாக நடித்த காட்சிகளை விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக ஒன்றிணைத்துக்கொள்ள இருக்கிறார்களாம்.