மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கேரளாவில் எண்பதுகளில் பிரசித்தி பெற்ற கொள்ளையனான சுகுமார குறூப் என்பவனின் வாழ்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள துல்கர் அந்தப்படத்தை முடித்து விட்டார். அதற்கு அடுத்த படத்தில் அப்படியே நேர்மாறாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான்.
சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
குறூப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா என்பவர் நடித்துள்ளார். அதேபோல சல்யூட் படத்திலும் பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்க இருக்கிறாராம். இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.