ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
எந்த மாநிலமாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவது, குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆந்திர போக்குவரத்து போலீஸார் இதற்காக என்னவெல்லாமோ விழிப்புணர்வு விஷயங்களை அமல்படுத்தியும் ஹெல்மெட் அணிவதை பெரிய அளவில் செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபுவை வைத்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
அதாவது பரத் ஆனே நேனு என்கிற படத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முதல்வராக நடித்திருந்தார் மகேஷ்பாபு. அப்படிப்பட்டவர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினால், வாகன ஓட்டிகள், குறிப்பாக அவரது ரசிகர்களாவது அதை பின்பற்றுவார்கள் என நினைத்தனர் போக்குவரத்து போலீஸார். அதன்படி மகேஷ்பாபு ஹெல்மெட் அணிந்தபடி வண்டி ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.