பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ஆராட்டு என்கிற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய, அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்..
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே ஆக்ரோஷமான மோகன்லாலை இந்த படத்தில் மீண்டும் பார்க்கலாம் என, படம் ஆரம்பிக்கும்போதே இயக்குனர் உன்னி கிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டரில் மோகன்லாலின் ஆக்சன் லுக்கை பார்த்ததும் அவரது ரசிகர்கள் பரவசமடைந்துள்ளார்கள்.. குறிப்பாக புலிமுருகன் படத்திற்கு பிறகு, தங்களை திருப்திப்படுத்தும் ஆக்சன் படமாக 'ஆராட்டு' இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.