ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
மோகன்லால் தற்போது மலையாளத்தில் நடித்து வரும் ஆராட்டு என்கிற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய, அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். நெய்யாற்றின்கரை கோபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்..
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஸ்படிகம், நரசிம்மம் ஆகிய படங்களில் பார்த்த அதே ஆக்ரோஷமான மோகன்லாலை இந்த படத்தில் மீண்டும் பார்க்கலாம் என, படம் ஆரம்பிக்கும்போதே இயக்குனர் உன்னி கிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் போஸ்டரில் மோகன்லாலின் ஆக்சன் லுக்கை பார்த்ததும் அவரது ரசிகர்கள் பரவசமடைந்துள்ளார்கள்.. குறிப்பாக புலிமுருகன் படத்திற்கு பிறகு, தங்களை திருப்திப்படுத்தும் ஆக்சன் படமாக 'ஆராட்டு' இருக்கும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.