பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிக்க வந்து ஒன்பது வருடங்கள் முடிந்து பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆச்சர்யமாக இவர் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர் சன்னி வெய்ன் என்பவர். இவரும் தற்போது ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறிமாறி நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாரி நிவின்பாலியை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
எப்படி தமிழில் விஜய் தான் நடித்த படங்களில் அவ்வப்போது தனது நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ் ஆகியோர் இருப்பது போல பார்த்துக் கொள்கிறாரோ, அதேபோலத் தான் துல்கர் சல்மானும் தனது நண்பர் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'குறூப்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது நட்பு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து சொல்லும் விதமாக, இவர்கள் இணைந்துள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.