'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிக்க வந்து ஒன்பது வருடங்கள் முடிந்து பத்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆச்சர்யமாக இவர் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானவர் சன்னி வெய்ன் என்பவர். இவரும் தற்போது ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறிமாறி நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாரி நிவின்பாலியை வைத்து படம் தயாரித்து வருகிறார்.
எப்படி தமிழில் விஜய் தான் நடித்த படங்களில் அவ்வப்போது தனது நண்பர்களான ஸ்ரீமன், சஞ்சீவ் ஆகியோர் இருப்பது போல பார்த்துக் கொள்கிறாரோ, அதேபோலத் தான் துல்கர் சல்மானும் தனது நண்பர் சன்னி வெய்னுக்கு தனது படங்களில் வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். இந்தநிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'குறூப்' என்கிற படத்திலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது நட்பு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்து சொல்லும் விதமாக, இவர்கள் இணைந்துள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.