நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் ராம்சரண் தெலுங்கில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் மைசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரில் தங்கியிருந்த கர்நாடக முதல்வரான சித்ராமையாவை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்துள்ளார் ராம்சரண்.
இது குறித்து புகைப்படங்களுடன் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தெலுங்கு நடிகர் ராம்சரண் பெத்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துவரும் நிலையில், மைசூரில் என்னை சந்தித்து உரையாடினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சந்தோஷும் ராம்சரணை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.