'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹிருதயபூர்வம். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சங்கீத் பிரதாப் நடித்துள்ளார். இவர் பிரேமலு படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்து தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். ஏற்கனவே மோகன்லாலுடன் தொடரும் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த ஹிருதயபூர்வம் படத்தில் மோகன்லாலுடன் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சங்கீத் பிரதாப்.
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் மோகன்லால் உடனான அனுபவங்கள் குறித்து சங்கீத் பிரதாப் கூறும்போது, “குமுளியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எனக்கு ஒரு நாள் தாங்க முடியாத காய்ச்சல் வந்தது. இயக்குனர் சத்யன் அந்திக்காடு, மோகன்லாலுக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறையிலேயே என்னை ஓய்வெடுக்கும்படி கூறினார். அந்த ஊரில் இருந்த டாக்டர் வரவழைக்கப்பட்டு எனக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். அப்போது அங்கே வந்த மோகன்லால் டாக்டரிடம் என் உடல் நிலை குறித்து கவனமாக கேட்டறிந்தார்.
அதன்பிறகு என் அருகில் நின்று என் தலையை சில வினாடிகள் கோதிவிட்டு நன்றாக ஓய்வெடு என்று கூறினார். அவரது அன்பை கண்டு என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அதுமட்டுமல்ல அன்றைய தினம் நானும் அவரும் நடிக்கும் காட்சிகள் தான் எடுக்கப்பட இருந்தன. அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்து விடுமாறும் அறிவித்துவிட்டார் மோகன்லால். அதன்பிறகு எனக்கு காய்ச்சல் குறைந்ததும், மறுநாள் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. என்னைப் போன்று வளர்ந்து வரும் ஒரு சிறிய நடிகருக்காக மோகன்லால் காட்டிய பரிவு என் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்று கூறியுள்ளார்.




