சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
முன்னணி மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன். தமிழில் மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரும்புத்திரை, தீவிரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது 'சேத்துமான்' பட இயக்குனரின் புதிய படத்தில் தர்ஷன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மலையாளத்தில் தயராகி உள்ள '4.5 கேங்' என்ற வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளார். கிருஷாந்த் இயக்கி உள்ளார். மேன்கைண்ட் சினிமா தயாரித்துள்ளது. ஜெகதீஷ், இந்திரன்ஸ், விஜயராகவன், ஹக்கிம் ஷா, சஞ்சு சிவராம், சச்சின், சாந்தி பாலச்சந்திரன், நிரஞ்ச் மணியன் பிள்ளை, ஸ்ரீநாத் பாபு, ஷம்பு அலெக்ஸ் மேனன், பிரசாத்பால், விஷ்ணு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 29 முதல் சோனி லைவ்வில் ஒளிபரப்பப்படுகிறது.
தொடர் குறித்து இயக்குனர் கூறும்போது, “4.5 கேங் என்பது திருவனந்தபுரத்தில் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சில அண்டர் கிரவுண்ட் புரோக்கர் கும்பல்களை பற்றிய கதை. அவர்கள் உள்ளூர் கோயில் திருவிழாவை கையகப்படுத்துவதன் மூலம் மரியாதை பெற முயற்சிக்கிறார்கள். அதற்கு என்னென்ன தந்திரங்களை கையாள்கிறார்கள் என்பதுதான் தொடரின் கதை. இதில் ஒரு கும்பலின் தலைவியாக தர்ஷனா நடித்துள்ளார் என்றார்.