ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

முன்னணி மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன். தமிழில் மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரும்புத்திரை, தீவிரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது 'சேத்துமான்' பட இயக்குனரின் புதிய படத்தில் தர்ஷன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மலையாளத்தில் தயராகி உள்ள '4.5 கேங்' என்ற வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளார். கிருஷாந்த் இயக்கி உள்ளார். மேன்கைண்ட் சினிமா தயாரித்துள்ளது. ஜெகதீஷ், இந்திரன்ஸ், விஜயராகவன், ஹக்கிம் ஷா, சஞ்சு சிவராம், சச்சின், சாந்தி பாலச்சந்திரன், நிரஞ்ச் மணியன் பிள்ளை, ஸ்ரீநாத் பாபு, ஷம்பு அலெக்ஸ் மேனன், பிரசாத்பால், விஷ்ணு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 29 முதல் சோனி லைவ்வில் ஒளிபரப்பப்படுகிறது.
தொடர் குறித்து இயக்குனர் கூறும்போது, “4.5 கேங் என்பது திருவனந்தபுரத்தில் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சில அண்டர் கிரவுண்ட் புரோக்கர் கும்பல்களை பற்றிய கதை. அவர்கள் உள்ளூர் கோயில் திருவிழாவை கையகப்படுத்துவதன் மூலம் மரியாதை பெற முயற்சிக்கிறார்கள். அதற்கு என்னென்ன தந்திரங்களை கையாள்கிறார்கள் என்பதுதான் தொடரின் கதை. இதில் ஒரு கும்பலின் தலைவியாக தர்ஷனா நடித்துள்ளார் என்றார்.