'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

நடிகர் மோகன்லால் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடிப்பில் புராண படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்கிற படத்தில் சிவபெருமானாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது திருப்பதி வந்த மோகன்லால் திருமலை சென்று அங்கே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
மேலும் மோகன்லால் டைரக்ஷனில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேண்டுதலுக்காகவும் மோகன்லால் திருப்பதிக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தவிர பிரித்விராஜ் டைரக்ஷனில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் மற்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் ஜோஷி இயக்கி வரும் ரம்பான் ஆகிய படங்களில் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




