ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

இந்தியாவிலேயே ஓடிடியில் அதிக படங்கள் வெளிவருவது கேரளாவில் தான். வாரத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி வெளியீட்டுக்கென்றே படங்களும் தயாராகிறது. மலையாளிகள் உலகம் முழுக்க இருப்பதால் ஓடிடி வியாபாரம் கேரளாவில் அதிகமாக இருக்கிறது.
சிறிய படம் என்று இல்லாமல் பெரிய படங்களும் ஓடிடியில் வெளிவதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் சமீபத்தில் வெளியான புரோ டாடி படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் வருமானத்தை இழந்தன. காரணம் மோகன்லால் படங்களுக்கு என்று ஒரு மினிமம் வசூல் இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் மோதிக் கொண்டிருந்தன. இறுதியில் தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்படும்போது பெரிய படங்கள் முதலில் தியேட்டரிலும் பிறகு ஓடிடி தளத்திலும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் மோகன்லால் நடித்து முடித்துள்ள ஆராட்டு படம் வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




