மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

ஹிந்தியில் ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்சய்குமார், ஹூமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பை திரில்லர் படம் பெல்பாட்டம். இந்த படத்தை கொரோனா தொற்று காரணமாக ஓடிடியில் வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து பெல்பாட்டம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும் என்று அறிவித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அக்சய்குமார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்திருப்பதால் ஆகஸ்ட் 19-ந்தேதி பெல்பாட்டம் படத்தை தியேட்டரில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், கொரோனா லாக் டவுனுக்கு பிறகு ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு வரும் ஆர்வம் குறைந்து விட்டதால், அவர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சியாக பெல்பாட் டம் படத்தை 3டியில் வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.