ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கானா : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். ஒரு சில வாரத்திற்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு தரப்பினர் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர் படத்தின் கிராபிக்ஸ் சரியில்லை, அவர்களின் தோற்றம் மற்றும் வசனங்கள் குறித்து விமர்சனம் எழுந்தது. இதனால் படத்தின் வசூலும் சற்றென்று குறைந்தது. இந்தநிலையில் ஆதி புருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அவரது டுவிட்டரில் "ஆதி புருஷ் பார்த்த பிறகு தான் புரிந்தது பாகுபலி படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.