பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? |
கமலின் தக் லைப் படத்திற்கு பின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49வது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருக்கிறார்.
இதனால் இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49 ஆகிய படங்களின் நிலைமை இடியாப்ப சிக்கலில் உள்ளது. டான் பிக்சர்ஸ் தரப்பில் சிம்பு 49 படத்திற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இட்லி கடை, பராசக்தி படத்தை திரைக்கு கொண்டு வாங்க. பிறகுதான் கால்ஷீட் தருவதாக சிம்பு தெரிவித்துள்ளாராம். இதனால் சிம்பு 49 படம் உருவாவதில் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உடனடியாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.