இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' |

கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். அந்த படத்தில் விதார்த், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பின்னர் கடந்தாண்டு மகாராஜா என்ற படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் 190 கோடி வசூலித்தது. அதையடுத்து சீன மொழியிலும் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது.
இந்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நியூயார்க்கில் ஆஸ்கர் விருது பெற்ற பேடு மேன் என்ற படத்தின் ரைட்டர் அலெக்சாண்டர் டினெலாரிஸ் என்பவர் அழைத்து பாராட்டி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்திலன் சுவாமிநாதன், ‛‛இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. வீட்டுக்கே என்னை அழைத்து அன்பு காட்டியதற்கு மிக்க நன்றி'' என்று ஒரு பதிவு போட்டு உள்ளார்.