நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1 மற்றும் 2, காந்தாரா, சலார் போன்ற பான் படங்களை தயாரித்து, இந்திய அளவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஹோம்பாலே பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சலார் 2, கேஜிஎப் சாப்டர் 1 ஆகிய படங்கள் கையில் உள்ளன.
இந்நிலையில் அடுத்தப்படியாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு படம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்நிறுவனம், ‛பிக் பேங் பிகின்ஸ்' என தெரிவித்துள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். இயக்குனர் யார் என்பதை குறிப்பிடவில்லை. ஏற்கனவே பிரபாஸை வைத்து ஹோம்பாலே நிறுவனம் மூன்று படங்களைக் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.