மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1 மற்றும் 2, காந்தாரா, சலார் போன்ற பான் படங்களை தயாரித்து, இந்திய அளவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஹோம்பாலே பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சலார் 2, கேஜிஎப் சாப்டர் 1 ஆகிய படங்கள் கையில் உள்ளன.
இந்நிலையில் அடுத்தப்படியாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு படம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்நிறுவனம், ‛பிக் பேங் பிகின்ஸ்' என தெரிவித்துள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். இயக்குனர் யார் என்பதை குறிப்பிடவில்லை. ஏற்கனவே பிரபாஸை வைத்து ஹோம்பாலே நிறுவனம் மூன்று படங்களைக் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.