வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியான கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நிலவிய சமயத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஆதித்யா தர் என்பவரை திருமணம் செய்துகொண்டு, ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை தந்தார்.
கொரோனா காலகட்டம் என்பதால் அப்போது கணவருடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த யாமி கவுதம், தற்போது தம்பதி சகிதமாக பல இடங்களுக்கு சுற்றுலா கிளம்பி விட்டார். அந்தவகையில் சமீபத்தில் அம்ரிஸ்தரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள யாமி கவுதம், பொற்கோவில் பின்னணியில் தெரியும்படி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.