'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பல வருடங்களுக்கு முன் வெற்றி பெற்ற படத்தை தற்காலத்துக்கு ஏற்ற மாதிரி ரீமேக் செய்வது அவ்வபோது நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதன் ரீமேக்கை வேறு ஒரு இயக்குனர் தான் இயக்கியிருப்பார்.. ஆனால் 1995ல் இந்தியில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே' படத்தை அதன் இயக்குனர் ஆதித்யா சோப்ராவே மீண்டும் ரீமேக் செய்து இயக்கவுள்ளாராம்.
ஷாரூக்கான், கஜோல் நடித்திருந்த இந்த திரைப்படத்தின் மூலம் தான் ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 102.50 கோடி ரூபாயை வசூலித்தது. மேலும் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்தநிலையில் 26 வருடங்கள் கழித்து இந்தப்படத்தை தானே ரீமேக் செய்யப்போவதாக கூறியுள்ளார் ஆதித்ய சோப்ரா. இதுபற்றி கடந்த சில வருடங்களாகவே கூறி வந்த ஆதித்ய சோப்ரா, இந்தப்படத்தை முற்றிலும் புதிய குழுவினரை கொண்டு உருவாக்க இருக்கிறாராம்.