விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் காரணம் இல்லை என நடிகை ஷீலா தெரிவித்துள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். தற்போது ஷீலா தொடரிலிருந்து விலக்கப்பட்டதுடன், தொடரில் அவர் இறந்ததாகவும் காட்டப்பட்டது. இந்நிலையில் இதற்கு காரணம் ஷீலாவின் மகனும், நடிகருமான விக்ராந்தே காரணம் என செய்திகள் பரவி வருகிறது.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷீலா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு விக்ராந்த் தான் காரணம் என்பது வெறும் வதந்தி தான். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விஜய் டிவி-யின் புதிய சீரியலில், ஹீரோயினின் அம்மாவாக நடிக்கிறேன். என்னை வேண்டுமென்றே நீக்கியிருந்தால், எதற்கு மீண்டும் அழைக்க வேண்டும்? என அதில் கூறியுள்ளார்.