‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் |
சென்னை: சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
பழம் பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அதில், பல ஹிட் பாடல்களும் அடங்கும். சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். பழம்பெரும் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுக்கு இவரின் குரலில் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அந்த அளவிற்கு தனது மெல்லிய குரல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பி.சுசீலா.
கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிகாணிக்கை செலுத்தியபோது, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடிய வீடியோ வைரலானது. சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி
பி.சுசீலா, மிகவும் நலமாக இருக்கிறார் என டாக்டர்கள் தகவல் தெரிவித்து
உள்ளனர்.