லட்டு விவகாரம் : பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி | ''2வது திருமணம் செய்யவில்லை; பொய் சொன்னேன்'' - சுசித்ரா 'ஓபன் டாக்' | ஒன்றாக வளர்கிறோம் - மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ? | அக்டோபர் 27ல் முதல் மாநில மாநாடு - தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட கட்டுப்பாடு!! | மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நரேன் | சூர்யாவை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? | டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி தாங்க : அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் | பி.சுசீலா, மு.மேத்தாவிற்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது | பாலியல் வழக்கில் நடிகர் முகேஷ் கைது, 3 மணிநேரம் விசாரணை : சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு |
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல பின்னணி பாடகி பி சுசீலா மற்றும் பாடலாசிரியர் மு.மேத்தா ஆகியோருக்கு “கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில், கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். கடந்த 2023ம் ஆண்டுக்கான விருது, பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும்.
பாடகி சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.
கவிஞர் மு.மேத்தா, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி, தனி முத்திரை பதித்தவர். மாநிலக்கல்லுாரி பேராசிரியராக பணியாற்றியவர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விருது, வரும் 30ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.