கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி |
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல சீரியல் ஒன்றை மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஞ்சித், ப்ரியா ராமன், ஸ்ரீ நிதி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'செந்தூரப்பூவே' தொடர் விஜய் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பபாங்கான கதைக்களம் கொண்ட இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் பாய்ண்ட்ஸ்களை அள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சரியான டைம் ஸ்லாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களின் நேரங்களும் மாற்றப்படவுள்ளது.
அந்த வகையில் 1 மணி நேர ஷோவிற்காக இரண்டு சீரியல்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். இதற்கிடையில் செந்தூரப்பூவே தொடரை 3 மாதங்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்க தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சிகாகவா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதேபோல் விஜய் டிவின் மற்றொரு முக்கிய தொடரான தேன்மொழி பி.ஏ தொடரும் முடிவை நோக்கி நகர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.