7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரபல சீரியல் ஒன்றை மூன்று மாதங்கள் நிறுத்தி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஞ்சித், ப்ரியா ராமன், ஸ்ரீ நிதி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் 'செந்தூரப்பூவே' தொடர் விஜய் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பபாங்கான கதைக்களம் கொண்ட இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் பாய்ண்ட்ஸ்களை அள்ளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சரியான டைம் ஸ்லாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சில தொடர்களின் நேரங்களும் மாற்றப்படவுள்ளது.
அந்த வகையில் 1 மணி நேர ஷோவிற்காக இரண்டு சீரியல்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். இதற்கிடையில் செந்தூரப்பூவே தொடரை 3 மாதங்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்க தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் நிகழ்ச்சிகாகவா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதேபோல் விஜய் டிவின் மற்றொரு முக்கிய தொடரான தேன்மொழி பி.ஏ தொடரும் முடிவை நோக்கி நகர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.