மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

என்றும் மார்கண்டேயன் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இளமையாகவே காட்சி அளிக்கும் நடிகர் நடிகர் மம்முட்டி நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். பல திசையில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதேசமயம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதமாக டாவின்சி சுரேஷ் என்கிற ஓவியர் 20 அடி உயரம் கொண்ட மம்முட்டியின் போர்ட்ரெய்ட் ஓவியத்தை அவரது பிறந்தநாள் பரிசாக உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஆம்.. சுமார் 6௦௦ மொபைல் போன்கள் மற்றும் 6000 மொபைல் போன் பயன்பாட்டிற்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் என்பதுதான் இந்த பிரமிப்புக்கு காரணம்.. இத்தனை போன்களையும் உதிரி பாகங்களையும் கொடுத்து இதை உருவாக்குவதற்கு பின்னணியில் தூண்டுதலாக இருந்துள்ளார் அனாஸ் என்கிற மொபைல் கடை உரிமையாளர்.. கே-பீஸ் என்பவர் தனக்கு சொந்தமாக உள்ள மினி ஹால் ஒன்றில் இதற்கான இடவசதியை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.