நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
என்றும் மார்கண்டேயன் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இளமையாகவே காட்சி அளிக்கும் நடிகர் நடிகர் மம்முட்டி நேற்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். பல திசையில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதேசமயம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதமாக டாவின்சி சுரேஷ் என்கிற ஓவியர் 20 அடி உயரம் கொண்ட மம்முட்டியின் போர்ட்ரெய்ட் ஓவியத்தை அவரது பிறந்தநாள் பரிசாக உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
ஆம்.. சுமார் 6௦௦ மொபைல் போன்கள் மற்றும் 6000 மொபைல் போன் பயன்பாட்டிற்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொண்டு இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் என்பதுதான் இந்த பிரமிப்புக்கு காரணம்.. இத்தனை போன்களையும் உதிரி பாகங்களையும் கொடுத்து இதை உருவாக்குவதற்கு பின்னணியில் தூண்டுதலாக இருந்துள்ளார் அனாஸ் என்கிற மொபைல் கடை உரிமையாளர்.. கே-பீஸ் என்பவர் தனக்கு சொந்தமாக உள்ள மினி ஹால் ஒன்றில் இதற்கான இடவசதியை ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.