‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பாடகர்களை தேடும் சரிகமப சாலஞ்ச் 2012 நிகழ்ச்சி, இறுதிச் சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் பரத்வாஜ், உன்னிமேனன், ரைஹானா, ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, மோகன் வைத்தியா உள்ளிட்டவர்களை நடுவர்களாக கொண்டு நடைபெற்று வரும் இப்போட்டி நிகழ்ச்சியில், தற்போது தமிழகம் முழுவதிலுமிருந்து தலை சிறந்த 7 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 7 போட்டியாளர்களும் கோவை மாநகரில் அமைந்துள்ள பன் ரிபப்ளிக் மாலிலும், 16-ம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலிலும் கலந்து கொள்கிறார்கள். தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களும் நேரடியாக மக்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இசை உலகின் ஜாம்பவான்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறும். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளர் ஒருவருக்கு சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு நிச்சயம். பரபரப்பான தருணத்தை அடைந்திருக்கும் ‘சரிகமப’ நிகழ்ச்சி, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.