பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரான விஜய சாரதி நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் தோன்றவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
90-களின் காலக்கட்டத்தில் தொலைக்காட்சிகள் தொழில்நுட்ப தரத்திலும், எண்ணிக்கையிலும் இப்போது இருப்பது போல் கிடையாது. அதேசமயம் ஒரு தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் வெற்றியில் அதிகபட்ச பெருமை தொகுப்பாளர்களையே சேரும். தொகுப்பாளர்களும் தங்கள் திறமை ஒன்றையே வைத்து நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வந்தனர். அந்நிகழ்ச்சிகளின் வரிசையில் முன்னணி டிவி ஒன்றில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியை நினைவு கூறும் எவரும் விஜே சாரதியை மறக்கவே முடியாது.
பல்வேறு இடங்களுக்கு சென்று அந்த இடத்தை பற்றிய எக்ஸ்குளூஸிவ் தகவல்களை சுவாரசியமாக, பின்னால் திரும்பாமல் நடந்து கொண்டே சொல்வது அவரது தனிப்பட்ட ஸ்டைல். இதற்காகவே இந்தியா மட்டுமல்லாமல் பிறநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவ்வாறாக அந்த காலகட்டத்தின் டாப் விஜேக்களில் ஒருவராக வலம் வந்த விஜய சாரதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குகிறார்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த விஜய் சாரதி பவளக்கொடி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆனால், படங்களில் பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. அதேசமயம் சின்னத்திரையில் சித்தி, கோலங்கள், விக்கிரமாதித்யன் மற்றும் விடாது கருப்பு என பல ஹிட் சீரியல்களில் நடித்தார். பின்னர் ஒரு காலக்கட்டத்தில் எந்த திரையிலும் தோன்றாமல் காணமல் போய்விட்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் கம்பேக் கொடுத்திருந்த அவர் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர், மேலும் விஜய் சாரதிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.